Sunday, February 15, 2009

Kirukkanin......!!!!

கிறுக்கனின்.....

Pongal films?
குருகுலம் "படிக்காதவன்" கையில் "வில்"லற்றே
கருத்திலா பொங்கல் படம்.

Paavam Airtel!
தமிழகம் சென்றால் தவறாமல் செய்வது
உரிமை நண்பனுடன் SMS உரையாடல்
அன்றும் அப்படியே!!
என் எண்ண அலைகளை வானலைகளில் ஏந்தி சென்றது Airtel!
"Rh" என்று அனுப்பினான் ஆருயிர்;
வேதனை,
அணுக முடியவில்லை அதன்பின் அவனை!
பாவம் Airtel!
அப்பாக்கவுண்டர் தோட்டம் வரை செல்வது - அதன் சக்திக்கும்
அப்பாற்பட்டது போலும்!! :-(

V-Day special:
உலகை மறந்தேன்; உவகை அடைந்தேன்
உன்னாலே உன்னாலே !!
அழகை ரசிப்பேன்; அருளை அடைவேன்
அன்பாலே அன்பாலே !!

கவிஞனிடம் கேட்டார்கள்,
"கவிதை எழுதுகிறாயே, காதல் கொண்டாயோ?"
கவிஞன் கூறினான்,
"ஆம்! காதல் கொண்டேன்; கவிதையின் மீது!
ஓர் அழகிய கவிதையின் மீது!!"

- கிறுக்கல்கள் தொடரும்........

4 comments: