Saturday, November 27, 2010

இம்சை அரசி

விடையும் தெரியாமல் 
விடவும் முடியாமல் 
திணற வைக்கும்
விந்தையான விடுகதை நீ!

என் உள்ளம் உடைந்தால்தான் உன்னை அழைப்பேன்
என்று நீ நினைத்த போது தான்
என் உலகம் உடைந்தது;
கண்கள் கலங்கியது

நம்பினால் தான் நட்பும் காதலும்!
நான் உன்னை நம்பவில்லை
என்று நீ நினைத்தாய் -
என் மீது உனக்கு நம்பிக்கை இல்லாததால்!

இடைவிடா இம்சைகளுக்கும்,
மலிவான மிரட்டல்களுக்கும்,
குழப்பமான கேள்விகளுக்கும்
என் நாகரீக நன்றிகள்!!

Friday, November 26, 2010

அர்த்தம் புரிந்தது!!

அர்த்தமற்ற என் எழுத்துக்கள்  
தமிழில் இருப்பதால் 
அர்த்தம் புரியவில்லை அவளுக்கு;
" 'மொழிபெயர்த்துச் சொல்' என்று
என்னிடம் கேட்க எண்ணியவள்,
'அர்த்தம் (ஏதேனும் இருப்பின்,
அதை) இழக்க நேரிடும்' 
என்பதால் கேட்கவில்லையாம்" -
என்னிடம் கூறி நகைத்தாள்!
ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அடக்கம் - 
அவளின் அந்தப் புன்னகையில்...