விடையும் தெரியாமல்
விடவும் முடியாமல்
திணற வைக்கும்
விந்தையான விடுகதை நீ!
என் உள்ளம் உடைந்தால்தான் உன்னை அழைப்பேன்
என்று நீ நினைத்த போது தான்
என் உலகம் உடைந்தது;
கண்கள் கலங்கியது
நம்பினால் தான் நட்பும் காதலும்!
நான் உன்னை நம்பவில்லை
என்று நீ நினைத்தாய் -
என் மீது உனக்கு நம்பிக்கை இல்லாததால்!
இடைவிடா இம்சைகளுக்கும்,
மலிவான மிரட்டல்களுக்கும்,
குழப்பமான கேள்விகளுக்கும்
என் நாகரீக நன்றிகள்!!