Saturday, November 27, 2010

இம்சை அரசி

விடையும் தெரியாமல் 
விடவும் முடியாமல் 
திணற வைக்கும்
விந்தையான விடுகதை நீ!

என் உள்ளம் உடைந்தால்தான் உன்னை அழைப்பேன்
என்று நீ நினைத்த போது தான்
என் உலகம் உடைந்தது;
கண்கள் கலங்கியது

நம்பினால் தான் நட்பும் காதலும்!
நான் உன்னை நம்பவில்லை
என்று நீ நினைத்தாய் -
என் மீது உனக்கு நம்பிக்கை இல்லாததால்!

இடைவிடா இம்சைகளுக்கும்,
மலிவான மிரட்டல்களுக்கும்,
குழப்பமான கேள்விகளுக்கும்
என் நாகரீக நன்றிகள்!!

3 comments:

  1. Nice usage of words Siva :-)Guess these come out of experience :-)

    ReplyDelete
  2. பிடித்திருக்கு

    ReplyDelete
  3. @Sundar: :-) Hmmm.. May be.. :-P
    @Raji: thanks and welcome to my blog.. :-)

    ReplyDelete