Wednesday, January 13, 2010

என்னைத் தேடி...


பெற்றோருக்கு நல்ல பிள்ளை;
உறவினர்க்கோ செல்லப் பிள்ளை!

பள்ளியில் முதன்மை மாணவன்;
கல்லூரியில் மற்றுமொரு மாணவன்!

சிலருக்கு முன்-மாதிரி யானவன்;
சிலருக்கு ஒரு மாதிரியாய் தெரிபவன்!

கணிதத்தில் புலி - குழு
விவாதத்தில் எலி!

அவனுக்கு பாசம் நிறைந்தவன்;
இவனுக்கோ பாசாங்கு செய்பவன்!

அவர்களுக்கு பிழை திருத்தம் செய்பவன்;
இவர்களுக்கோ பிழைக்கத் தெரியாதவன்!

ஒருவருக்கு விளையாட்டுப் பிள்ளை - மற்றும்
ஒருவருக்கு தீராத தொல்லை!

பலர் பார்வையில்,
பல தோற்றங்களில் - நான்!
பல இடங்களில்,
பல வேடங்களில் - நான்!
பட்டையைக்  கிளப்புகிறேன்!
பச்சோந்திக்கும் போட்டியாக!!

இருந்தும் இடையில் ஏனோ - மனம்,
"இவற்றுள் உண்மையான 'நான்' யார்?"
என்று தேடுகின்றது! - விடை
கிட்டாது என்று தெரிந்தும்!

என் நடிப்பும் தொடர்கின்றது...!
குறிப்பு: உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது.



11 comments:

  1. really very nice.
    style of narration is too good.
    all the best :-)

    ReplyDelete
  2. @ திகழ்: மிக்க நன்றி!!

    ReplyDelete
  3. @ சக்தியின் மனம்: தங்கள் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  4. If you are stil looking for who you really are, may be me and my friend can help.. You know who you are, and you know who this is..

    ReplyDelete
  5. @Mani: Thank you for ur visit and comment..

    ReplyDelete
  6. @Colin: Thanks for the proposed help. I will surely take ur and ur friend's help wen I feel I need that!

    ReplyDelete
  7. Hey siva...nee kavithai lam ezhuthuviya !!! really very nice man.....All t best 4 all ur future plans !!!

    ReplyDelete